தலைமுடி பராமரிக்கும் முறை..

Posted by ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்  |  at  7:37 PM

1. வேப்பிலையை அரைத்து தலையில் தடவி, 15-20 நிமிடம் கழித்து தலைமுடியை அலசலாம்.




2. இரண்டு முட்டைகளை உடைத்து அதில் இருக்கும் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து அதனுடன் ஆலிவ் எண்ணெயை சேர்த்து தலையில் நன்றாக தேய்த்தபின். 15-20 நிமிடங்கள் கழித்து அலசலாம்.

3. வெந்தயத்தை கூழாக்கி அதில் பன்னீரைச் சேர்த்து தலையில் தேய்த்து 20-30 நிமிடங்கள் கழித்து அலசலாம்.

4. செம்பருத்தி (செவ்வரத்தை) இலையை அரைத்து அதனை தலையில் தேய்த்து ஊறவிட்டு பின்னர் நன்கு அலசி விடலாம்.

5. இரவில் லேசான சூட்டில் தேங்காய் எண்ணெய் தேய்த்து ஊறவிட்டு பின்னர் காலையில் தலைக்கு குளிக்கலாம்.

6. ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை எடுத்து நாலு கப் தண்ணீரில் நன்கு கொதிக்கவிடவும். அந்த தண்ணீரால் தலையை அலசி வந்தால் பொடுகு வராமல் தடுக்கலாம் .

7. வினிகரை தலையில் தடவி குளித்து வந்தால் பொடுகு தொல்லை குறையும் .

8. சுடு தண்ணீரில் அடிக்கடி தலை குளிப்பதை தவிர்க்கவும் .

9. வெந்தயம் ,வேப்பிலை, கறிவேபிள்ளை, பாசிபருப்பு, ஆவாரம்பூ இவை எல்லாவற்றையும் வெயில் காயவைத்து மிஷினில் கொடுத்து மாவாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடியை ஷாம்பூவுக்கு பதிலாக வாரம் இருமுறை இந்த பவுடரை கூந்தலில் தேய்த்து அலசி வந்தால் கூந்தல் பளபளக்கும்.

9. ஹேர் ரையர் (hair dryer) அடிக்கடி உபயோகித்தால் தலை வறண்டு, முடியின் வேர்கள் பழுதடைந்து விடும். அதிகம் கேமிகல் நிறைந்த ஷாம்பூ மற்றும் ஹேர் கலர் உபயோகிப்பதை தவிர்த்து கொள்ளுவது நல்லது .

10. ஆலிவ் எண்ணையை இரவு படுக்கும் முன் தலையில் தடவி ஊறவிட்டு மறுநாள் காலையில் அலசினால் பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

11. முட்டை வெள்ளை கருவை நன்கு அடித்து தலையில் தேய்த்து ,ஊறவைத்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் கூந்தல் பளபளக்கும்.

12. முடி உதிர்வதை தடுக்க அதிகம் ஐயன் ,வைட்டமின் நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டு வரவேண்டும் .

13. இன்று முக்கால் வாசி பெண்கள் தலைக்கு எண்ணையே தடவுவது கிடையாது. .அது முற்றிலும் தவறு .தலைக்கு தவறாமல் தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும் . அதிகம் எண்ணெய் பசை உள்ளவர்கள் வாரம் ஒரு முறை தடவினால் போதும்.

14. எண்ணெய் குளியல் மிகவும் அவசியம் .சிறிது நல்ல எண்ணையில் இரண்டு மிளகு ,பூண்டு இவை இரண்டையும் போட்டு சிறுது நேரம் குறைந்த தீயில் காயவைத்து தலையில் தடவி சீயக்காய் தேய்த்து குளித்து வந்தால் உடல் சூடு தணியும் . முடி உதிர்வதையும் தடுக்கலாம்.

15. கறிவேபிலை மற்றும் மருதாணி இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து மாதம் இரண்டு முறை குளித்து வந்தால் இள நரையை தடுக்கலாம்.

1 comments:

ரூ10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு. அவசியம் படிக்க‌...

Posted by ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்  |  at  7:25 PM

நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.





இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்
அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற
ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).


( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2
மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க
முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை
போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை
வராதவர்களும் பின்பற்றலாம்..!!!!!
நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.

இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.

இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.

எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.

ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.

மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்
அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.

சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.

எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற
ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்

அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).


( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2
மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க
முடிந்தால் நலம்.

நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.

கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,

பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,

அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.

மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.

அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை
போயே போயிந்தி.. இட்ஸ் கான்...

இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.

சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :

துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)

ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.

திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.

மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.

அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.

தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.

இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.

வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.

மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.

பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.

பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை
வராதவர்களும் பின்பற்றலாம்..!!!!!

0 comments:

சுகப் பிரசவம் நடந்திட உதவும் அதிமதுரம்..!

Posted by ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்  |  at  7:10 PM

• அதிமதுரம், சீரகம் சம அளவு எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு நிவர்த்தியாகும்.



• அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும். பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

• போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும்.

• அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 அல்லது 100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2 முதல் 3 மாதங்கள் வரை சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

0 comments:

தொப்பையை குறைக்க கொள்ளு ரசம் குடிங்க

Posted by ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்  |  at  7:16 PM

உடல் பருமனா? வயிற்று பிரச்சினையா?



கொள்ளு ரசம்..!

கொள்ளு-600 கி.
வெந்தயம்-100 கி.
மல்லி-100 கி.
சுக்கு-100 கி.
சீரகம்-50 கி.
பட்டை-50 கி.

இவற்றை ஒவ்வொன்றையும் தனித்தனியே பொன்நிறமாக வறுத்து தனித்தனியே பொடி செய்து பின்னர் ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு 200 மில்லி நீரில் 2 டீஸ்பூன் பொடிய கலந்து 100 மில்லியாக சுண்டக்காய்ச்சி வெறும் வயிற்றில் காலை, மாலை (சாப்பாட்டிற்கு 45 நிமிடங்களுக்கு முன்பாக) இருவேளை அல்லது 3 வேளை குடித்தால் உடல் எடை குறைந்து தொப்பை குறைந்து வயிற்று பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

உடல் பருமனா? உங்களுக்கான டயட்: 

20 வயது முதல் 30 வயது உடையவர்கள் தான் தற்போது ஒல்லியான உடலுக்கு அதிக முக்கியத்துவம் தருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடலைக் குறைப்பதற்காக மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொண்டு, பட்டினி கிடக்கின்றனர். பட்டினி கிடந்தால் உடல் குறைந்து விடும் என்பது தவறான கருத்து. இது உடலை பலவீனமாக்கி விடும். மாத்திரைகளும் பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். உடல்பருமனை குறைக்க முறையான உடற்பயிற்சியோடு உணவுக்கட்டுப்பாடு அவசியம்.

ஒருநாளைக்கு நம் உடலுக்குத் தேவையான சரிவிகித உணவு என்னென்ன?

காலை 6 மணி : டீ ,காஃபி அல்லது ஏடு நீக்கப்பட்ட பால் அரை கப் (100 மி.லி.) அதில் ஒரு டீஸ்பூன் சர்க்கரை மட்டுமே சேர்க்க வேண்டும்.

9 மணி : 2 இட்லி அல்லது இரண்டு தோசை, ஒரு கப் உப்புமா அல்லது ஒரு கப் பொங்கல். இதோடு தேங்காய் சேர்க்காத சட்னி வகைகளை சேர்த்துக் கொள்ளலாம்.

11 மணி : மோர் ஒரு கப், எலுமிச்சை ஜூஸ் ஒரு கப், தக்காளி ஜூஸ் ஒரு கப் இவற்றில் ஏதாவது ஒன்றை இரண்டு டீஸ்பூன் சர்க்கரை அல்லது சிறிது உப்பு கலந்து பருகலாம்.

மதியம் 1 மணி : எண்ணெய் இல்லாத சப்பாத்தி 2 அல்லது ஒரு கப் சாதத்தை கீரை, காய்களிகள் , ரசம் ஆகியவற்றோடு கலந்து சாப்பிடலாம். சாப்பிட்டு ஒருமணி நேரம் கழித்து இளநீர் சாப்பிடலாம்.

மாலை 4 மணி : காபி, டீ குறைந்த அளவு சர்க்கரையுடன் சாப்பிடலாம்.

மாலை 5.30 மணி : ஆப்பில், கொய்யா, மாதுளை இவற்றில் ஏதாவது ஒன்றுடன் வேகவைத்த சுண்டல் ஒருகப் சாப்பிடலாம்.

இரவு 8 மணி : காய்கறி சூப், எண்ணெய் இல்லாத சப்பாத்தி அல்லது பருப்பு, கோஸ் பொரியலுடம் ஒரு கப் சாதம் சாப்பிடலாம். படுப்பதற்கு முன் ஏதாவது பழம் சாப்பிடலாம். வாழைப்பழம் உடல்பருமனுக்கு நண்பன் என்பதால் அதை தவிர்த்து விடலாம்.

0 comments:

சிங்கப்பூர் வேலைவாய்ப்பு தகவல்

Posted by ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்  |  at  8:17 PM

0 comments:

தமிழ்நாடு அரசின் பயனுள்ள விண்ணப்பப்படிவங்கள்

Posted by ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்  |  at  12:18 PM



1. ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு CLICK

2. திருமணப்பதிவிற்கான  விண்ணப்ப படிவம் CLICK

3. ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு CLICK1,  CLICK2

4. நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு CLICK

5. பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் CLICK 

6. மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம் CLICK

7. இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொருளை  இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம் CLICK

8. UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/
http://www.upsc.gov.in/
http://upscportal.com/civilservices/
http://www.iba.org.in/
http://www.rrcb.gov.in/
http://trb.tn.nic.in/

9. சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய CLICK 

10. சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ் CLICK 

11. பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் CLICK , CLICK 

12. வில்லங்க சான்றிதழ் CLICK 

13. பட்டா / சிட்டா அடங்கல் CLICK 

0 comments:

இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-புகார் பதிவு செய்ய

Posted by ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்  |  at  7:19 PM

இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்  (the consumer protect act, 1986) இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வுத் தன்மையை பதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால் ஏற்படுத்தப்பெற்றச் சட்டமாகும். ஜூலை 1, 1987 முதல் இச்சட்டம் அமலுக்கு வந்த்து.



இச்சட்டம் 1991 மற்றும் 1993 களில் திருத்தச் சட்டங்களாக வெளிவந்தன். நுகர்வோர் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் விதமாகவும், அதன் செயற்பாடுகள், முக்கியத்துவங்கள் அதிகரிக்கப்பட்டு டிசம்பர், 2002 இல் புதிய திருத்தச்சட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு, மார்ச் 15, 2003 புதிய பரிமானங்களுடன் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்த்தது.
இதன்படி வடிவமைக்கப்பட்ட விதிகள் நுகர்வோர் பாதுகாப்பு விதிகள், 1987 என அழைக்கப்படுகின்றன. இந்த விதிகள் மார்ச் 5, 2004 முதல் நாட்டுக்கு அறிமுகம் செய்யப்ப்ட்டது.

நுகர்வோரின் உரிமைகள்:

1. உயிருக்கும் உடைமைகளுக்கும் தீங்கு விளைவிக்ககூடிய பொருட்களை சந்தைப்படுத்துவதில் இருந்து பாதுகப்பு பெறும் உரிமை

2. நேர்மையற்ற வர்த்தக செயல்முறைகளில் இருந்து தங்களைப்பாதுகாத்துக் கொள்வதற்காக, சந்தையில் வழங்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரம், அளவு, தூய்மை, தரனிலை மற்றும் விலை பற்றிய அனைத்து விவரங்களையும் அறிந்துகொள்வதற்கான உரிமை.

3. பலவகைப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை போட்டி விலைகளில் வாங்குவதற்கான வாய்ப்புகளைப் பெறுவதற்கான உரிமை

4. நுகர்வோரின் குறைகளைக் கேட்பத்ற்கும் அவர்க்ளின் உரிமைகளைப் பாதுகாக்கவும் உத்தரவாதம் பெறும் உரிமை

5. நேர்மையற்ற வர்த்தகச் செயல்முறைகள் மற்றும் கட்டுப்படுத்தும் வர்த்தகச் செயல்முறைகள் போன்றவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கான உரிமை

6. நுகர்வோருக்கான விழிப்புணர்வினைப் பெறும் உரிமை

7. நுகர்வோரின் சச்சரவுகளுக்கு விரைவாகவும் எளிமையாகவும் தீர்வு பெறும் உரிமை.


நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் எல்லை:

1. இந்த சட்டம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும். ஆனால் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு மட்டும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

2. பொருட்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றுக்கு மட்டுமே இந்தச் சட்டம் பொருந்தும்.

3. தனியார் துறை, பொதுத்துறை, கூட்டுறவுத்துறை போன்றவைகளுக்கும் இச்சட்டம் பொருந்தும்.

சட்டம் பொருந்தாத நிலைகள்

1. வாங்கிய பொருளை மறு விற்பனை செய்தல் அல்லது இலாபம் ஈட்ட வேண்டும் என்கிற நோக்கத்துக்கு வாங்கப்பட்ட பொருள்.

2. இலவசமாக பெற்ற பொருள் அல்லது இலவச சேவை
உதாரணம்:
அரசு மருத்துவமனைகளில் பெறும் இலவச மருத்துவ சேவை.

3. இலவச அனுமதியளிக்கும் திட்டங்களில் பெறும் சேவை குறைபாடுகளுக்கு இச்சட்டத்தின்படி வழக்கு தொடர முடியாது.

 இந்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், உரிமை சம்பந்தமான புகாரை பதிவு செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்.


1 comments:

இயற்கை விவசாய புகைப்படங்கள்

Posted by ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்  |  at  11:04 AM


ஏர் உழுவும் விவசாயி 


பப்பாளி பழம் 



மாம்பழம் 




அழகான நெல்லிக்கனி 



0 comments:

ஓர் ஆண்டு 75 ஆயிரம்நம்பிக்கை தரும் நாட்டுமாடுகள்...வளர்ப்பு

Posted by ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்  |  at  10:50 AM

பால்... அதிக பால்... என ஆசைப்பட்டு, வெளிநாட்டு இனப் பசுக்களையும்... கலப்பினப் பசுக்களையும் தேடி ஒட ஆரம்பித்ததில், நம் நாட்டு இனப் பசுக்களை பலரும் மறந்தே விட்டார்கள். தற்போது, இயற்கை விவசாயம் மீது உள்ள ஆர்வத்தால், பெரும்பாலானோர் நாட்டுப் பசுக்களைத் தேடி வாங்கி வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அவர்களில் ஒருவராக... கரூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் கணேசன்...



தமிழகத்தைச் சேர்ந்தப் பாரம்பரிய பசுக்களோடு, வடமாநில இனங்களான சாஹிவால், தார்பார்க்கர், கிர், காங்கிரேஜ்... போன்ற பசுக்களையும், முர்ரா ரக எருமைகளையும் வளர்த்து வருகிறார்.
கரூர்-தாராபுரம் சாலையில் 15-வது கிலோ மீட்டரில் இருக்கிறது, செல்லாண்டிப்பாளையம். பிரதான சாலையில் இருந்து இடதுபுறம் பிரியும் மண்சாலையில், இரண்டு கிலோ மீட்டர் தூரம் பயணித்தால்... கணேசனின் பண்ணை. மண்சாலையில் இரண்டு பக்கமும் உயிர்வேலியாக நீண்டு கிடக்கின்றன, கிளுவைச் செடிகள். அதில், பிரண்டையும், கோவைக் கொடியும் படர்ந்து கிடக்கின்றன. பண்ணையில் இருந்த கணேசனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.

''இது எங்க பூர்வீக இடம். மொத்தம் 32 ஏக்கர். இதுல 17 ஏக்கர் மானாவாரி மேய்ச்சல் நிலம். 10 ஏக்கர்ல மாடுகளுக்குத் தேவையான பசுந்தீவனம் இருக்கு. 5 ஏக்கர்ல தென்னை இருக்கு. முழுக்க முழுக்க கிணத்துப் பாசனம்தான். பக்கத்துல அமராவதி ஆறு இருக்கு. அரசு அனுமதியோட ஆத்துத் தண்ணியையும் கொண்டு வந்து பாசனம் செய்றதால... தண்ணி பிரச்னை கிடையாது.

தொழிலிருந்து தோட்டத்துக்கு!
சின்ன வயசுலேயே கரூர் போயிட்டேன். இருந்தாலும், அடிக்கடி ஊருக்கு வந்து பூர்வீக மண்ணைப் பார்க்கும்போது... பாட்டன், பூட்டன் செஞ்ச விவசாயத்தை நாமளும் செய்யணும்கிற ஆசை... மனசுக்குள்ள வந்து உக்கார்ந்துக்கும். இன்னிக்கு பரபரப்பான தொழிலதிபரா இருந்தாலும், விவசாய ஆர்வம் என்னை விடல. ஒரு கட்டத்துல கம்பெனிய பசங்ககிட்ட ஒப்படைச்சுட்டு, முழுநேர விவசாயியா மாறிட்டேன். பரம்பரையா எங்க தோட்டத்துல காங்கேயம் மாடுகளதான் வளர்ப்போம். நான் விவசாயத்துல இறங்கினதும், வேலாயுதம்பாளையத்துல நடந்த நம்மாழ்வார் கூட்டத்துல எதேச்சையா கலந்துகிட்டேன்.
அந்தப் பயிற்சியில, 'இயற்கை விவசாயம்தான் மண்ணுக்கும் மனுஷனுக்கும் ஏத்து’னு தெரிஞ்சுட்டேன். பிறகு, திண்டுக்கல்ல நடந்த சுபாஷ் பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சியிலயும் கலந்துக்கிட்டேன். அங்கதான், நாட்டுமாடுகளோட மகிமையையும், இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கற முறைகளையும் தெரிஞ்சுக்கிட்டேன்.

தீவனம் இல்லாமல் மாடு வாங்கக் கூடாது!
ஆரம்பத்துல, பயிர்களுக்குத் தேவையான இடுபொருள் தயாரிக்கறதுக்காகத்தான் நாட்டு மாடுகளை வளர்க்கலாம்னு முடிவெடுத்தேன். அதுக்காக, 10 ஏக்கர்ல பசுந்தீவன சாகுபடியை ஆரம்பிச்சேன். ஒரே ரகமா இல்லாம.... கோ-4, வேலிமசால், கோ.எஃப்.எஸ்-29, கிளரிசீடியா, சவண்டல் (சுபாபுல்), மல்பெரி, முயல் மசால்னு பல ரகமா இருக்குற மாதிரி பாத்துக்கிட்டேன். அதுக்கப்பறம்தான், மாடுகளை வாங்க ஆரம்பிச்சேன்.

'வெறுமனே இடுபொருளுக்காக மட்டும் இல்லாம, பால் விற்பனையும் செஞ்சா லாபகரமா இருக்குமே’னு தோணுச்சு. காங்கேயம் பசுக்களை மட்டும் வெச்சு பால் உற்பத்தியை அதிகப்படுத்த முடியாது. அதே நேரத்துல, கலப்பினப் பசுக்களை வாங்கி பால் வியாபாரியா மாறவும் எனக்கு மனசில்லை. 'என்ன பண்ணலாம்?’னு ரொம்பத் தீவிரமா யோசிச்சுக்கிட்டிருந்தேன். அந்த சமயத்துலதான், 'வாழப்பாடி’ மணிசேகர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர்தான், 'கலப்பினப் பசுக்களைப் போலவே அதிகம் பால் கறக்குற நாட்டுப் பசுக்களும் இருக்கு’னு சொன்னாரு. உடனடியா அலைஞ்சு திரிஞ்சு அந்த இன மாடுகளை வாங்குனேன்'' என்ற கணேசன், மாட்டுத் தொழுவத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.

எருமை எதையும் கழிக்காது!

நல்ல காற்றோட்டத்துடன் சிமெண்ட் தரைதளத்துடன் இருந்த தொழுவத்தில் ஒரு வரிசையில் பசுமாடுகளும் எதிர் வரிசையில் எருமை மாடுகளும் கட்டப்பட்டிருந்தன. தொழுவத்தில் நடந்து கொண்டே பேச ஆரம்பித்தவர், 'தொழுவத்தை 60 அடி நீளம், 30 அடி அகலம், 20 அடி உயரத்துல அமைச்சுருக்கேன்.

ஆரம்பத்துல பசு மாடுகளை மட்டும்தான் வாங்கலாம்னு இருந்தேன். சிலர், 'எருமைப்பால்ல கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். அதனால பாலுக்கு நல்ல விலை கிடைக்கும்’னு சொன்னாங்க. அதனால எருமைகளையும் வாங்க ஆரம்பிச்சேன். எருமை மாடு, பசுந்தீவனம், அடர்தீவனம் எல்லாத்தையும் கழிக்காமத் திங்கும். அதுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கறதால, மருத்துவச் செலவும் குறையுது. இப்போ... என்கிட்ட 7 காங்கேயம், 6 கிர், 4 தார்பார்க்கர், 4 காங்கிரேஜ், 4 சாஹிவால், 25 முர்ரா எருமைகள்னு மொத்தம் 50 உருப்படிக இருக்கு'' என்றவர், வருமானத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

ஒரே ஈத்துல எடுத்துடலாம்!

'வடமாநில மாடுகளோட விலை அதிகமா இருந்தாலும், போட்ட பணத்தை ஒரே ஈத்துல எடுத்துடலாம். உதாரணமா... சாஹிவால் பசுவை 75 ஆயிரம் கொடுத்து வாங்கினேன். இது, வருஷத்துக்கு 305 நாள் பால் கறக்குது. சராசரியா ஒரு மாட்டுல இருந்து 4 ஆயிரம் லிட்டர் பால் ஒரு வருஷத்துல கிடைக்குது.
நேரடியா நுகர்வோருக்கு ஒரு லிட்டர் 30 ரூபாய்னு விக்கிறேன். 4 ஆயிரம் லிட்டர் பால் மூலமா, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்குது. இதுல தீவனம், பராமரிப்புச் செலவு போக,
75 ஆயிரம் ரூபாய் லாபம். ஆக, ஒரு ஈத்து முடிஞ்சதுமே... மாடும், கன்னும் லாபக் கணக்குல சேர்ந்துடுது. இதேமாதிரி அம்பது மாட்டுக்கு கணக்குப் போட்டுக்கோங்க...'' என்ற கணேசன் நிறைவாக,
'ஜீவாமிர்தம் மாதிரியான இடுபொருட்கள் பயன்பாட்டுக்காக காங்கேயம் பசுக்களையும் வளக்குறேன். இதுல பால் மூலமா வருமானம் இல்லைன்னாலும், கன்று விற்பனை மூலமா வருஷத்துக்கு ஒரு தொகை கிடைச்சுடுது. ஆக மொத்தத்துல நாட்டு மாட்டு இனங்களைக் கலந்து வளத்தா... நிச்சயம் நல்ல லாபம் பார்க்கலாம். ஆரம்பத்துல எல்லா இனத்திலும் ஒவ்வொரு மாட்டை மட்டும்தான் விலை கொடுத்து வாங்கினேன். இடையில் சில கன்றுகளை வித்தது போக இப்ப, கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்புக்கு 50 மாடுக இருக்கு.
இப்போ, நாட்டுப் பசுக்களோட பாலுக்கு அதிக தேவை இருக்கறதால... நாட்டு மாடுகளை வளத்து பாலை நேரடி விற்பனை செஞ்சா கண்டிப்பா நல்ல லாபம் பாக்க முடியும்'' என்று நம்பிக்கையூட்டி விடை கொடுத்தார்.

செலவில்லாமல் உணவு!

பண்ணையில் கிடைக்கும் சாணத்தை வைத்து, சாண எரிவாயு தயாரிக்கிறார் கணேசன். ''சாண எரிவாயுத் தயாரிப்புக்காக 25 கன மீட்டர் அளவு கொண்ட தொட்டியை அமைச்சுருக்கேன். இதிலிருந்து வெளியேறுற எரிவாயுவைப் பயன்படுத்தித்தான், பண்ணையில் தங்கி வேலை செய்யுற அஞ்சு குடும்பங்களுக்கு உணவு தயாரிக்கிறோம். இதிலிருந்து வெளிவர்ற சாணக் கழிவுகளை (ஸ்லர்ரி) சிமென்ட் தொட்டிகள்ல நிரப்பி, ஜீவாமிர்தமா மாத்தி, பாசனத் தண்ணியில கலந்து 10 ஏக்கர் பசுந்தீவனப் பயிர்களுக்கும், 7 ஏக்கர் தென்னைக்கும் தொடர்ந்து கொடுத்துட்டு வர்றேன். சாண எரிவாயுவைப் பயன்படுத்தி ஆயில் இன்ஜினை இயக்குற முயற்சியிலயும் இருக்கேன்'' என்று சொன்னார் கணேசன்.

தொடர்புக்கு, சி. கணேசன்,
செல்போன்: 98652-09217.

0 comments:

மூலிகைகளின் மருத்துவ குணங்கள் - தமிழ் சித்த மருத்துவம்

Posted by ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்  |  at  10:28 AM



அருகம்புல் : மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்

ஓரிதழ் தாமரை : வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்

ஆடா தோடை :  இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு

தூதுவளை : சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு

நில ஆவாரை : மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்

நில வேம்பு : சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்

முடக்கத்தான் : மூட்டுப்பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்

வல்லாரை : ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை, மலச்சிக்கல்

அஸ்வகந்தி : கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்

வில்வம் : பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்

நெல்லிக்காய் : பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்

நாவல் கொட்டை : சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்

சுக்கு : வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்

திப்பிலி : சளி, காசம், பீனிசம், வாயு

அதிமதுரம் : இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்

சித்தரத்தை : இருமல், சனி, பீனிசம், கோழைக்கட்டு

ஜாதிக்காய் : விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்

வெந்தயம் : பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்

வசம்பு : வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்

ஆவாரம்பூ : அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்

செம்பரத்தம்பூ : தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்

ரோஜாப்பூ : இருதயம், ஈரல், நுரையீரல், கிட்னி நோய்கள் நீங்கும்

முல்தானி மிட்டி : முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்)

திருபலாசூரணம் : வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்

திரி கடுகு சூரணம் : பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்

வசம்பு : வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்

கரிசலாங்கண்ணி : மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்

கண்டங்கத்திரி : சளி, இருமல், ஆஸ்துமா, ஈசிலோபீலியா, பீனிசம்

கருந்துளசி : இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்

கறிவேப்பிலை : பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்

காசினி கீரை : ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்

கீழாநெல்லி : மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்

0 comments:

குடிமகனை குறிவைக்கும் போக்குவரத்து காவலர்கள் - உண்மை சம்பவம்

Posted by ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்  |  at  8:59 PM

         நேற்று இரவு  (வெள்ளிக்கிழமை ) நான் என் நண்பர்களுடன் இரவு 10 மணியளவில் வேளச்சேரி 100 அடி ரோட்டில் நின்று கொடிருந்தோம். அப்பொழுது சிக்னல் அருகே இரண்டு போக்குவரத்து காவலர்கள் நின்று கொண்டிருந்தார்கள். சிக்னல் போட்டதும் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை பார்த்த காவலர்கள் ஓடி வந்து அவர்களிடம் எந்த கேள்வியும் கேட்க்காமல் அவர்களின் வண்டியில் இருந்த சாவியை எடுத்து கொண்டு " நீ குடித்து விட்டு வண்டி ஒட்டுகிறீர்கள் " என்று கேட்டார்கள்.


அந்த நண்பர்கள் " நாங்கள் மதுபானம் குடிக்க வில்லை என்று சொல்ல " அந்த காவலர்கள் பதிலுக்கு "நீங்கள் பாரிலிருந்து வருவதை நாங்கள் பார்த்து கொண்டிருந்தோமே.." என்று சொன்னார்கள். 



எனக்கு அப்பொழுதான் ஒரு தகவல் தெரிய வந்தது என்னவென்றால் இந்த காவலர்கள் போக்குவரத்து நெரிசலை கவனம் கொள்ளாமல் பாரிலிருந்து வரும் வாகனங்களை குறி வைத்து வரி (1000, 2000 ரூபாய் ) வசூல் செய்கிறார்கள் என்று. அந்த நேரத்தில் இந்த நிகழ்வை எனது மொபைலில் வீடியோ பதிவு செய்யலாம் என்று பார்த்தல் இருளில் சரியாக ஒளிபதிவு ஆகவில்லை.



 அதே நேரத்தில் என் நண்பர்களோ " வேண்டாம் நமக்கு எதுக்கு இந்த பிரச்சினை " என்று சொல்லி என்னை அழைத்து கொண்டு சென்றார்கள். பிறகு நாங்கள் அனைவரும் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டோம். 

தயவு செய்து சொல்கிறேன் இதுபோல உங்களுடைய பணத்தை ஆட்டய போடா நினைக்கும் போக்குவரத்து காவலர்களுக்கு கொடுக்காமல், உங்களின் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு சேமியுங்கள். 

குடிக்கும் குடிமகன்கள் கவனிக்க வேண்டியவை :

1. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தவிருங்கள். அப்படி  தவிர்க்க முடியாத    சூழ்நிலையில் நண்பர்களை (மதுபானம் அருந்தாத) அழைத்து அவருடன் செல்வது நல்லது.

2. குடித்து விட்டு வாகங்களை வேகமாக ஓட்டுவதை முற்றிலுமாக நீங்கள் தவிர்க்க வேண்டும். 

3. அளவு மீறினால் அமிர்தமும் நஞ்சுதான். அளவாக குடியுங்கள்.

4. நீங்கள் குடிக்கும் மதுவினால் மற்றவர்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது. உங்களின் உடல் நலத்தையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

0 comments:

பெண்களுக்கான சமூக நலச் சட்டங்கள்

Posted by ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்  |  at  10:21 AM



1. 1955 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பெற்ற இந்து திருமணச் சட்டப்படி பெண்களின் திருமண வயது 17 வயதாக அறிவிக்கப்பெற்று தற்பொழுது 21 வயதாக அறிவிக்கப்பட்டு பின்பற்றப் படுகின்றது.

2. 1956- ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டம். பெற்றோர்களின் சொத்துக்களையடைய பெண்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.

3. 1961 ஆம் ஆண்டு வரதட்சணை தடுப்புச் சட்டம் (1984 இல் திருத்தப்பட்டது). வரதட்சணை வாங்குபவர்களுக்கு சிறைத் தண்டணைகளை கூடிய கடுந்தண்டணைகளை அளிக்கின்றது.

4. 1956 ஆம் அண்டு இந்து விதவைகள் மறுமணச் சட்டம், இந்து விதவைகள் (கைம்பெண்கள்) மறுமணத்தை அங்கீகரிக்கின்றது.

5. இந்து திருமணச் சட்டம் (1964 இல் தமிழக அரசின் திருத்தச்சட்டப்படி) சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டரீதியான அங்கீகாரம்.

6. 1989 ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச்சட்டம் (தமிழக அரசின் திருத்தச்சட்டம்) பெண்களுக்குப் பரம்பரை சொத்தில் சமபங்குரிமை.

7. தமிழக அரசின் 1999 ஆம் ஆண்டு பெண்களை கண்ணியமற்ற முறையில் சித்தரிப்பதை தடை செய்யும் சட்டம், இதனால் வாரப்பத்திரிகைகள், சுவரொட்டிகள், விளம்பர பலகைகள், ஊடகங்கள் போன்றவைகளில் பெண்களை கண்ணியமற்ற முறையில் சித்தரிப்பதை, விளம்பரப்படுத்துவதை தடை செய்கின்றது.

8.1961 மகப்பேறு நலச்சட்டம் மகப்பேறு காலத்தில் பெண்கள் விடுப்பு எடுக்கவும் அக்காலத்தில் ஊதியம் பெறவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வரதட்சணைக் கொடுமை:

வரதட்சணை கொடுக்க முடியாத நிலையில் பல பெண்கள் மாப்பிள்ளை வீட்டாரின் கொடுமையால் பாதிக்கப்படும் நிலை தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த வரதட்சணைக் கொடுமையினால் பல பெண்கள் தற்கொலை செய்து கொள்தல், கொலை செய்யப்படுதல், புகுந்த வீட்டிற்குத் துரத்தப்படுதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

1. வரதட்சணை கொடுப்பதும், அதை பெற்றுக் கொள்வதும் சட்டபடி குற்றாமாகும். இக்குற்றத்திற்கு,ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையுடன், ரூ.15,000/- க்குக் குறையாத அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.

2. வரதட்சணையை நேரிடையாகவோ, அல்லது மறைமுகமாகவோ கோரினால், 6 மாதங்களுக்குக் குறையாத சிறைத் தண்டனையுடன், ரூ.10,000/- வரை அபராதமும் விதிக்கப்பட்டாக வேண்டும்.

3. வரதட்சணைச் சாவுக்குக் காரணமானவருக்கு, 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். சில சமயங்களில், அவருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டாக வேண்டும்.

4. ஒரு பெண்ணின் கணவனோ, அல்லது அவள் கணவனின் உறவினரோ, அப்பெண்ணைக் கொடுமைக்கும் துன்பத்திற்கும் ஆளாக்கினால், அவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, அல்லது அபராதம் விதிக்கப்பட்டாக வேண்டும்.

2 comments:

சிறப்புக் காவல் இளைஞர் படையில் 10,500 பேருக்கு வேலை - தமிழக அரசு அறிவிப்பு

Posted by ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்  |  at  7:14 PM

இந்தப் பணியில் சேருவதற்கு தகுதி என்ன இருக்க வேண்டும்?


இந்தப் பணியில் சேருவதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். எஸ்எஸ்எல்சி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 18 வயது முதல் 25 வயது வரை (1-1-1988 முதல் 1-1-1995) இருக்கலாம். பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்கள்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினருக்கு 18 வயது முதல் 27 வயது வரை (1-1-1986 முதல் 1-1-1995) இருக்கலாம். தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட அருந்ததியர், பழங்குடியினருக்கு 18 வயது முதல் 30 வயது வரை (1-1-1983 முதல் 1-1-1995) இருக்கலாம்.

பொதுப் பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (இஸ்லாமியர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் 170 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்), மற்றும் பழங்குடியினர் 167 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். அனைத்து வகுப்பினருக்கும் மார்பு அளவானது சாதாரண நிலையில் குறைந்தபட்சம் 81 செ.மீ. இருக்க வேண்டும். மூச்சினை முழுமையாக இழுத்த நிலையில் குறைந்தபட்சம் 5 செ.மீ. மார்பு விரிவாக்கம் இருக்க வேண்டும்.

எப்படித் தேர்வு செய்யப்படுவார்கள்?

இந்தப் பணியில் சேர விரும்புபவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது. எழுத்துத் தேர்வில் அப்ஜெக்ட்டிவ் முறையில் 100 கேள்விகள் கேட்கப்படும். அதற்கு விடையளிக்க ஒரு மணி நாற்பது நிமிடங்கள் வழங்கப்படும். பத்தாம் வகுப்பு நிலையிலான தமிழ், ஆங்கிலம், கணிதம், பொது அறிவியல், இந்திய வரலாறு, புவியியல், பொருளாதாரம் மற்றும் வணிகம், இந்திய தேசிய இயக்கம், நடப்பு நிகழ்வுகள், போக்குவரத்து சைகைகள் மற்றும் முதலுதவி ஆகியவற்றில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் குறைந்தபட்சம் 35 மதிப்பெண்கள் பெற வேண்டும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களில் அந்தந்த மாநகர அல்லது மாவட்ட காலிப் பணி இட எண்ணிக்கைக்கு ஏற்ப 1:5 என்ற விகித அடிப்படையில், இன வாரியாக அடுத்த கட்டத் தேர்வான உடற்கூறு அளத்தல் மற்றும் உடல் தகுதித் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அந்தத் தேர்வில் 1,500 மீட்டர் தூர ஓட்டத்தை ஏழு நிமிடம் அல்லது அதற்குக் குறைவான நேரத்தில் ஓடி முடிக்க வேண்டும். உயரம் தாண்டுதலில் 1.20 மீட்டர் அல்லது நீளம் தாண்டுதலில் 3.80 மீட்டர் தூரத்தைத் தாண்ட வேண்டும். 100 மீட்டர் ஓட்டத்தை 15 வினாடிகள் அல்லது அதற்குக் குறைவான நேரத்தில் ஓடி முடிக்க வேண்டும் அல்லது 400 மீட்டர் ஓட்டத்தில் 80 வினாடிகள் அல்லது அதற்குக் குறைவான நேரத்தில் ஓடி முடிக்க வேண்டும். கயிறு ஏறுதலில் 5 மீட்டர் ஏற வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் இந்த நான்கு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு தகுதி பெற வேண்டும். ஏதேனும் ஒரு நிகழ்வில் தகுதி இழந்தால் மீதமுள்ள நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாது. இந்த நான்கு நிகழ்வுகளும் தகுதிச் சுற்றுத் தேர்வுகள் என்பதால் இதற்கு மதிப்பெண்கள் வழங்கப்படாது. இந்த நிகழ்வுகளில் உயரம் தாண்டுதலுக்கும் நீளம் தாண்டுதலுக்கும் மட்டும் இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்படும். இந்த இரண்டு வாய்ப்புகளில் விண்ணப்பதாரர் பெறும் உயர் அளவு கணக்கில் கொள்ளப்படும். 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் ஓட்டம் மற்றும் கயிறு ஏறுதல் நிகழ்வுகளுக்கு ஒரு வாய்ப்பு மட்டுமே தரப்படும். கயிறு ஏறும் போது கைகளைத் தவிர கால்களையோ அல்லது உடலின் மற்ற பாகங்களையோ பயன்படுத்தக் கூடாது.

உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் அனைத்து விண்ணப்பதாரர்களின் அசல் சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். விண்ணப்பத்துடன் அனுப்பிய  சான்றொப்பமிடப்பட்ட, சான்றிதழ்களின் அசல் சான்றிதழ்கள் அனைத்தையும் தேர்வு மையத்திற்கு சரிபார்ப்பதற்காகக் கொண்டு வர வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

தேர்வுக் கட்டணம் ரூ.100. இந்தத் தேர்வுக் கட்டணத்தை குறிப்பிட்ட அலுவலக முகவரியில் செலுத்தி விண்ணப்பம் மற்றும் அறிவுரைகள் அடங்கிய கையேட்டை 02.09.2013 காலை 10 மணி முதல் 30-9-2013 மாலை 5.45 மணிக்குள் அனைத்து வேலை நாட்களிலும் பெற்றுக் கொள்ளலாம். அவ்வாறு நேரடியாக விண்ணப்பத்தைப் பெற இயலாதவர்கள் இணையதளத்திலிருந்து விண்ணப்பம் மற்றும் அறிவுரைகள் அடங்கிய கையேட்டினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிப்பவர்கள், அவர்கள் விண்ணப்பிக்க விரும்பும் மாவட்டம் அல்லது மாநகரத்துக்குரிய முகவரியில் குறிப்பிட்டுள்ள காவல்துறை அதிகாரிகளின்  பதவியின் பெயரில் தேர்வுக் கட்டணத்துக்கான வங்கி வரைவோலையை எடுத்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

உரிய வயதுத் தகுதி, கல்வித் தகுதி இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். சரியாகப் பூர்த்தி செய்யப்படாத, புகைப்படம் ஒட்டப்படாத, கையொப்பமிடாத, சரியான முகவரியிடப்படாத குறைந்த தேர்வுக் கட்டணம் செலுத்தியுள்ள, தேர்வுக் கட்டணத்துக்கான வரைவோலையை இணைக்காத இணையதள விண்ணப்பங்கள், தவறான முகவரிக்கு எடுக்கப்பட்ட வங்கி வரைவோலை உள்ள விண்ணப்பங்கள், தவறான முகவரிக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்கள் போன்றவை ஆரம்பநிலையிலேயே எந்தவித அறிவிப்புமில்லாமல் நிராகரிக்கப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பத்தை அனுப்புவதற்கு முன்னதாக இந்த விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை குறிப்பிட்ட அலுவலக முகவரியில் 1-10-2013 மாலை 5.45 மணிக்குள் கிடைக்கும்படி தபால் மூலமோ அல்லது நேரிலோ சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகலை விண்ணப்பதாரர்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் வயதுத் தகுதியுடையவர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம், அவர்களது முகவரிக்கு அனுப்பப்படும். தேர்வு நடைபெறும் நாளுக்கு முன்னர் அழைப்புக் கடிதம் கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள், அவர்களின் விண்ணப்ப நகலைக் காட்டி, அவர்கள் விண்ணப்பம் அனுப்பியுள்ள மாவட்டம் அல்லது மாநகரக் காவல் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெறும் அதிகபட்ச மதிப்பெண்கள் மற்றும் உடல் தகுதித் தேர்வுகளில் அடையும் தேர்ச்சியின் அடிப்படையில், நடைமுறையில் உள்ள அரசு விதிமுறைகளின்படி, வகுப்புவாரி ஒதுக்கீட்டின் அடிப்படையில் அந்தந்த மாவட்ட, மாநகர மொத்தக் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். பின்னர், இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் குணநலன்கள், முந்தைய நடத்தைகள் சார்ந்த விசாரணைகள் நடத்தப்பட்டு, தகுதி உடையவர்கள்  பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.

தமிழக அரசு புதிதாக உருவாக்கியுள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படையில் சேர, ஆர்வமுள்ள எஸ்எஸ்எல்சி படித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.

விவரங்களுக்கு: www.tnusrb.tn.gov.in

விண்ணப்பங்களை எங்கு வாங்கலாம்?

01.     சென்னை காவல் - காவல் துணை ஆணையாளர் (நிர்வாகம்) சென்னை பெருநகர காவல் அலுவலகம், எழும்பூர், சென்னை - 600 008
02.     காஞ்சிபுரம் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், காஞ்சிபுரம் - 631 501
03.     திருவள்ளூர் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், திருத்தணி சாலை, திருவள்ளூர் - 602 001
04.     விழுப்புரம் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், விழுப்புரம் - 605 602
05.     கடலூர் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், கடலூர் - 607 001
06.     வேலூர் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், சத்துவாச்சாரி, வேலூர் - 632 009
07.     திருவண்ணாமலை - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், திருவண்ணாமலை - 606 604
08.     கோயம்புத்தூர் - காவல் துணை ஆணையாளர் (தலைமையிடம்), மாநகர காவல் அலுவலகம், கோயம்புத்தூர் -  641 018
09.     கோயம்புத்தூர்  மாவட்டம் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், கோயம்புத்தூர் - 641 018
10.     ஈரோடு - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், காந்தி சாலை, ஈரோடு - 638 001
11.     நீலகிரி - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், நீலகிரி மாவட்டம், நீலகிரி - 643 001
12.     திருப்பூர் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், அங்கேரிய பாளையம் சாலை, திருப்பூர் - 641 602
13.     சேலம் மாநகரம் - காவல் துணை ஆணையாளர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) மாநகர காவல் அலுவலகம், லைன் மேடு, சேலம் மாநகரம் - 636 006
14.     சேலம் மாவட்டம் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், நெத்திமேடு, சேலம் - 636 002
15.     நாமக்கல் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், தும்மங்குறிச்சி, நாமக்கல் - 637 003
16.     தருமபுரி - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், தருமபுரி - 636 705
17.     கிருஷ்ணகிரி - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், கிருஷ்ணகிரி - 635 115
18.     திருச்சி மாநகரம் - காவல் துணை ஆணையாளர் (குற்றம் மற்றும் போக்குவரத்து), மாநகர காவல் அலுவலகம், சுப்பிரமணியபுரம், திருச்சி - 620 020
19.     திருச்சி மாவட்டம் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், சுப்பிரமணியபுரம், திருச்சி - 620 020
20.     கரூர் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், கரூர் மாவட்ட ஆட்சியரக வளாகம், கரூர் - 639 007
21.     பெரம்பலூர் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், பெரம்பலூர் - 621 212
22.     அரியலூர் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், பல்@நாக்கு வளாகம், அரியலூர் - 621 704
23.     புதுக்கோட்டை - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், திருமயம் சாலை, புதுக்கோட்டை - 622 001
24.     தஞ்சாவூர் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், நீதிமன்ற சாலை, தஞ்சாவூர் - 631 001
25.     நாகப்பட்டினம் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், வெள்ளிப்பாளையம், நாகப்பட்டினம் - 611 001
26.     திருவாரூர் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், பெருந்திட்ட வளாகம், திருவாரூர் - 610 001
27.     மதுரை மாநகரம் - காவல் துணை ஆணையாளர் (தலைமையிடம்), மாநகர காவல் அலுவலகம், தெற்கு காவல் கூட தெரு, மதுரை - 625 001.
28.     மதுரை மாவட்டம் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், அழகர் கோவில் சாலை, சர்வேயர் காலனி, கே.புதூர், மதுரை - 625 007
29.     விருதுநகர் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், விருதுநகர் - 626 002
30.     திண்டுக்கல் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், திண்டுக்கல் - 624 004
31.     தேனி - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், தேனி - 625 531
32.     இராமநாதபுரம் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், இராமநாதபுரம் - 625 503
33.     சிவகங்கை காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், சிவகங்கை - 630 561
34.     திருநெல்வேலி மாநகரம் - காவல் துணை ஆணையாளர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) மாநகர காவல் அலுவலகம், திருநெல்வேலி - 627 002
35.     திருநெல்வேலி மாவட்டம் - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், திருநெல்வேலி - 627 002
36.     தூத்துக்குடி - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி - 628 101
37.     கன்னியாகுமரி - காவல் கண்காணிப்பாளர், மாவட்ட காவல் அலுவலகம், கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் - 629 001

விண்ணபங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 1.10.2013 மாலை 5.45 மணி வரை
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் 10.11.2013

0 comments:

நான் படித்ததில் பிடித்த சிந்தனைகள்

Posted by ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்  |  at  12:32 PM



1. விதைத்தவன் உறங்கினாலும் விதை ஒருபோதும் உறங்குவதில்லை

    - பிடல் காஸ்ரோ

2. புரட்சி தானாக உருவாகுவதில்லை...
    நாம்தான் உருவாக்க வேண்டும்...!

    -சேகுவேரா 

3. எங்கே அந்நீதியை கண்டாலும்
    உன் மனம் தாங்க முடியாமல் துடிக்கிறதா...!
    அப்படியானால் நீயும் நானும் நண்பன் தான்..!

 -சேகுவேரா

4. வாழ்கையில் எதிரிகளே இல்லாமல் இருப்பவன்.....
     வாழ்கையை முழுதாக வாழவில்லை என்று தான் அர்த்தம்!"


-சேகுவேரா

5. தோல்வியை ஒப்புக்கொள்ள தயங்காதே , அதிலிருந்து கற்றுக்கொள்ள          வேண்டியது நிறைய இருக்கிறது

-லெனின் 

6. "உண்மையில் நான் அர்ஜெண்டினாவை சேர்ந்தவன் மேலும் க்யுபாவை    சேர்ந்தவன், பொலிவியாவை சேர்ந்தவன், ஆப்ரிக்காவை சேர்ந்தவன்,  ஆசியாவை சேர்ந்தவன், ஏன் அமெரிக்காவை சேர்ந்தவன் கூட. ஏனெனில்  அடிமைப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு. அவர்களுக்கு  எனது போராட்டம் தேவையை இருக்கிறது. நானொரு கொரில்லா போராளி.  அப்படி அழைக்கபடுவதைத்தான் நான் விரும்புகிறேன்"

- சேகுவேரா

7. "நான் இறந்த பிறகு என் துப்பாக்கியை என் தோழர்கள் எடுத்து கொள்வார்கள்      , அப்போதும் அநீதிக்கு எதிராக தோட்டாக்கள் சீறிப்பாயும் "

- சேகுவேரா

8. புகழை மறந்தாலும், நீ பட்ட அவமானங்களை மறக்காதே!! அது இன்னொரு     முறை நீ அவமனபடாமல் காப்பாற்றும்

-ஹிட்லர் 

9. கண்ணுக்கு தெரிந்த மனிதரை மதிக்காவிட்டால் கண்ணுக்கு தெரியாத    கடவுளை மதித்தும் பயன் இல்லை.

-அன்னை தெரசா

10. சிந்திக்கும் போது,நிதானமாக சிந்தியுங்கள்..
     செயல்படும் போது,உறுதியோடு செயல்படுங்கள்...
     விட்டுக்கொடுக்கும் போது,
     மன நிறைவோடு விட்டுக்கொடுங்கள்..

0 comments:

தமிழ் பேசும் மக்கள் - ஓர் அறிமுகம்

Posted by ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம்  |  at  10:27 AM




ஒவ்வொருவருக்கும்  தன்னுடைய எண்ணங்களையும்  , கருத்துகளையும் மற்றவர்களோடு பகிர்ந்துக்கொள்ள நினைப்பார்கள். அந்த பகிர்வு எழுத்துக்கள் மூலமாகவோ, நேர்காணல் மூலமாகவோ இருக்கலாம். என்னுடைய இந்த பகிர்வு எழுத்துக்கள் மூலமாக மற்றவர்களை சென்றடையும் என்பதில் எனக்கு  எந்த சந்தேகமும் இல்லை.

என்னுடைய பதிவுகள்  தமிழக  அரசியல், கல்வி, வேலைவாய்ப்பு, தமிழ் சினிமா, மருத்துவம், ஆன்மிகம், விவசாயம், தொழில்நுட்பம் , சுற்றுலா தளங்கள், தகவல் அறியும் உரிமை சட்டம் போன்ற பல்வேறு வகையான துறைகளை சார்ந்து என்னுடைய பதிவுகள் பின்  தொடரும். என்னை பற்றிய தகவல் நீங்கள் தெரிந்துக்கொள்ள விரும்பினால் பின் தொடர்ந்து படியுங்கள்...நான் ஒரு விவசாயி மகன்.

எனது சொந்த ஊர் வாரியங்காவல் (அரியலூர் மாவட்டம்). நான் சென்னையில் உள்ள   தனியார் நிறுவனத்தில் பணிப்புரிந்து  வருகிறேன். இந்த "தமிழ்  பேசும் மக்கள்" வலைபதிவுக்கு உங்கள் ஆதரவை  தாருங்கள். நன்றி ..! வணக்கம் ..!

0 comments:

என்னுடன்...

பின் தொடர்பவர்கள்...

தொடர்பு கொள்ள...

Name

Email *

Message *

back to top